தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி கொடுத்த சீமான்!

ஏழு தமிழர்களை விடுவிப்பதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

அப்போது கொரோனா நிவாரண நிதியாக சீமான் ரூ 5 லட்சம் அளித்தார்.

இதன் பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி அனைத்திலும் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார். அனைத்துத் துறைகளும் வேகமாக இயங்குகின்றன.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து வலியுறுத்தினோம். அவர்கள் விடுதலையில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பேன் என தெரிவித்தார், என் தந்தை இறந்த போது ஸ்டாலின் ஒரு அறிக்கை கொடுத்திருந்தார்.

அவர் நினைத்தார் அதோடு விட்டிருக்கலாம். ஆனால் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது என்னை நெகிழ வைத்தது என கூறியுள்ளார்.