தூக்கில் சடலமாக தொங்கிய 25 வயதான பெண் பொலிஸ்! அவருடன் போனில் பேசிய ஆண் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் இளம்பெண் பொலிஸ் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதன் பின்னணி வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டம் கஞ்சம்பமடியை சேர்ந்தவர் மகாலட்சுமி (25). கடந்த 2018-ம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்த இவர் கோவை புறநகர அதிரடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக அவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பொலிஸ் குடியிருப்பில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். மகாலட்சுமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே படைப்பிரிவில் வேலை பார்த்து வரும் பொலிஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். 2 பேரும் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த மகாலட்சுமி தனது செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டு படுக்கை அறைக்கு சென்றார். அங்கு இருந்த மகாலட்சுமி காதலனுடன் ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக காதலியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் மகாலட்சுமியுடன் தங்கி இருக்கும் அவரது தோழிக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார்.

இதனையடுத்து அவர் மகாலட்சுமியின் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.