குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதி…!!

யாழ்ப்பாணம்- நாவற்குழியிலுள்ள ஆலயமொன்றில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த மூவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மயக்கமடைந்தமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த ஆலயத்தில், சிரமதான பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அப்பகுதியில் குளவிக் கூடுவொன்று கலைந்து, சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தவர்களை துரத்தி கொட்டியது.

குறித்த சம்பவத்தினால் மயக்கமடைந்த மூவர், அங்கிருந்தவர்களினால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.