இலங்கையில் புதிதாக 2,706 பேருக்கு கொரோனா…..

இலங்கையில் மேலும் 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் 169,878 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.