சுன்னாகத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்து வெளியான பல தகவல்கள்!

சுன்னாகம் மயிலங்காடு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மரணம் தற்கொலையென்பது தெரியவந்துள்ளது.

சுன்னாகம் மயிலங்காடு ஞானவைரவர் கோவில் பின் பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. அதன் பக்கத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன் ஒன்றும் காணப்பட்டது.

எஸ்.பத்மநாதன் (வயது-75) என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,

அவர் தனிமையில் வாழ்ந்தவர். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை கோயிலுக்கு சென்றவர்கள், சடலத்தை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இந்த சம்பவத்தில் குற்றச்செயல்கள் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.