கைதிகள் கூரை மீதேறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கண்டி – போகம்ரை சிறைச்சாலை கைதிகள், சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றுகாலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கைதிகளான தமக்கு, கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், தமக்கு விரைவில் பிணை வழங்க வேண்டும் எனவும் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை சிறைச்சாலையில் 20க்கும் அதிகமான கைதிகள் கட்டட கூரையின் மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் போராட்டத்தை இன்று பகல் கைவிட்டுள்ளனர்.