ஒரே நாளில் 2371 பேருக்கு கொரோனா….!

இலங்கையில் மேலும் 585 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,371 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 140,456 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.