விளையாட்டு சண்டை வினையில் முடிந்தது….

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கில்பர்ட் சாலை ஸ்ரீ கிருஷ்ணா சொசைட்டி பகுதியை சார்ந்தவர் சிவசங்கர் (வயது 43). இவரது உறவினர் சுதாகர் (வயது 36). இவர்கள் இருவரின் வீடும் பக்கத்திலேயே இருந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் 10 மணியிருக்கையில், சுதாகர் தனது மாமா சிவசங்கரன் வீட்டினை கடந்து சென்றிருக்கிறார். இதன்போது, பாட்டுக்கேட்டு நின்று கொண்டு இருந்த மாமா மகனின் ஹெட்போனை சுதாகர் விளையாட்டாக பறித்துள்ளார்.

இதனால் இரண்டு பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், சிவசங்கர் மகனிடம் சண்டையிட்ட சுதாகரை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் சிவசங்கரை கீழே தள்ளிய நிலையில், படுகாயமடைந்த சிவசங்கரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

சிவசங்கரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.