கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினி.!

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது.

பின்னர், வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்தவுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

பிணத்தை எரிக்கவோ மருத்துவமனைகளில் படுக்கைக்கோ இடம் கிடைக்காமல் மக்கள் அன்றாடம் அல்லாடி வரும் செய்திகளை காணமுடிகிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது விதி முறைகளை கடைப்பிடிப்பது என்று முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகர் ரஜினிகாந்த் தற்போது தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டார். இதற்காக பணியாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து அவர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.