வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.