மேலும் ஒருவர் கொரோனாவிற்கு பலி

யாழ்ப்பாணத்தில்  மேலும்   ஒருவர் கொவிட்-19 கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவில் மின்தகனம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.