இலங்கையில் புர்காவை தடை

இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தென்னாபிரிக்கா ஐக்கிய உலமா சபை மற்றும் தென்னாபிரிக்கா சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ஆகியோர், குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இதேவேளை உலமா பேரவை இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கையில்,

‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான குரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது, புர்கா தடை மற்றும் மத்ரசாக்கள் மூடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவை அனைத்தும் பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.