காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி….

தமிழகத்தில், பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் அரசமரத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (44). இவருக்கு மணிமேகலை(40) என்ற மனைவியும், விஜய்மூர்த்தி(14) மற்றும் காமேஷ்வரன்(9) என 2 மகன்களும் உள்ளனர்.

ராஜேஷ்கண்ணன் உசிலம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மணிமேகலைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி(43) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியதால், இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

மனைவியின் இந்த காதல் விவகாரம் கணவனுக்கு தெரியவர, அவர் இவர்களை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் ராஜேஷ் கண்ணனின் பேச்சை கேட்காமல், தொடர்ந்து அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

இதனால் மணிமேகலை மற்றும் ராஜேஷ் கண்ணன் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமேகலை, காதலன் மலைச்சாமியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அதன் படி சம்பவ தினமான, நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்கண்ணன் தனது வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது மணிமேகலை கொடுத்த தகவலின்பேரில் அங்கு வந்த மலைச்சாமி, அம்மிக்கல்லை தூக்கி ராஜேஷ் கண்ணன் தலையில் போட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் வலியால் துடிக்க, உடனடியாக மலைச்சாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மணிமேகலையும் எதுவும் தெரியாதது போன்று வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின், ராஜேஷ்கண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அவரது தம்பி கதிரவன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது இரத்த வெள்ளத்தில் ராஜேஷ்கண்ணன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மலைச்சாமி தான் இந்த கொலையை செய்தது உறுதியானதால், அவரை கைது செய்ததுடன், இதற்கு உடந்தையாக இருந்த மணிமேகலையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.