நள்ளிரவில் படுக்கையறையில் சிவானியிடம் கண்ணீர் விட்ட பாலா!

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆஜீத் வெளியேறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

இதனால் போட்டி மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. ஆஜீத் வெளியேறியதை அவரும் மற்றவர்களும் இயல்பாக எடுத்து கொண்டதால் யாரும் பெரிதாக வருத்தப்படவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விளக்குகள் அணைந்த பின் பாலாஜி, ஷிவானியிடம் பேசிய காட்சிகள் காட்டப்பட்டன. அதில் அவர் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறினார்.


நள்ளிரவில் படுக்கையறையில் இருவரும் அமர்ந்து கொண்டு ஆரியை பற்றி பேச ஆரம்பித்தது, நாளைய நாமினேஷனுக்கான ஒத்திகை என்றே தெரிகிறது. இருவரும் பேசி வைத்துக் கொண்டு யாரையும் நாமினேட் பண்ண மாட்டோம் என பொய்யாக பேசி வரும் நிலையில், இப்படி நடந்து கொள்வது அவர்களுக்கே சரியாக இருக்கிறதா என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

ஆரி என்ன சோம்பேறி, டர்ட்டி கேம் ஆடுறன்னு சொன்னதும் தான் எனக்கு கோபம் வந்துடுச்சு, அதனால தான் கன்ட்ரோல் இல்லாமல் அப்படி பேசிட்டேன். அவர் என்கிட்ட பேருக்கு மன்னிப்பு கேட்டது எனக்கு கேட்கவே இல்லை. அதனால தான் வெளியே வந்து நான் கேட்டேன் என ஷிவானியிடம் பாலா அழுது புலம்புவது வேடிக்கையான ஒன்று தான்.

எத்தனை இரவுகள் இப்படி திட்டம் போட்டு பேசியிருப்பாங்கன்னு இப்போ தான் தெரியுது என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.