பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு ஏற்பட்ட விபரீத சோகம்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி, கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே, என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று பேச துவங்கிவிட்டாராம் ரோஷினி.

இதனால் பதற்றமடைந்த சீரியல் குழு உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இதன்பின் தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து, பழைய நிலைமைக்கு ரோஷினி திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.