மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி.. புகைப்படத்துடன் சப்ரைஸ் கொடுத்த இயக்குனர்..

காதல் கொண்டேன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

திரையரங்குகளில் சூப்பர் ஹிட்டடித்த இப்படம், தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிற்கிறது. காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன திரைப்படத்தில் இந்த கூட்டணி இணைந்தது.

ஆனால் இந்த கூட்டணியில் இருந்து மீண்டும் ஒரு திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சப்ரைஸ் தந்து செல்வராகவன், சில நாட்களுக்கு முன் ” D ” என குறிப்பிட்டு, அப்டேட் ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் சென்றுகொண்டு இருக்கிறது என்று தனது புகைப்படத்துடன் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அப்டேட்..