தர்ஷன், சனம் இடையே ஏற்பட்ட பிரச்சினை… அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்

தர்ஷன் சனம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில், தர்ஷன் தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார் என்று சனம் பொலிசில் புகார் அளித்திருந்தார்.

தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சனம் ஷெட்டி, தர்ஷனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். மேலும், இவர்கள் இருவரும் காதலித்த விஷயத்தை கூட சனம் அப்போது சொல்லவில்லை.

இப்படியொரு நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை சனம் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட சனம் ஷெட்டி, தர்ஷன் தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சில பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வந்தவுடன் தான் தன்னை சுத்தமாக கண்டுகொள்வதே இல்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால், தர்ஷனோ சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை தான்… ஆனால், அவருடைய நடவடிக்கை சரியில்லாததால் அவர் மீது இருந்த நம்பிக்கையும், காதலும் போய்விட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தார்.

தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்கம் தொடரப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தர்ஷன் மீது சனம் வீட்டில் புகார் அளித்திருந்தாலும் அதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இப்படியொரு நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சனம்ஷெட்டி புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.