பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்!

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதினாறு வயதுடைய சிறுமியை நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று வெருகல் பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.