தர்ஷனுக்கு ஆப்பு வச்சுட்டு பிக்பாஸில் நுழைந்த சனம் ஷெட்டி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கலை நிகழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என யூகிக்கப்பட்ட பட்டியலில் இருந்தவர்களே பெரும்பாலும் இருந்தனர். ஆர்ஜே அர்ச்சனா உள்பட ஒரு சிலர் மட்டுமே யூகிக்கப்பட்டவர்களில் இடம்பெறவில்லை. இதில் தர்ஷனின் முன்னாள் காதலியிலும் நடிகையுமான சனம் ஷெட்டி சர்ச்சைக்கு மத்தியில் பங்கேற்ற போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

அதாவது பிரச்சனை, போலீஸ் , வழக்கு என சர்ச்சைக்குரிய போட்டியாளராக பங்கேற்ற வனிதாவை போலவே சனம் ஷெட்டி இந்த சீசனில் இடம்பெற்றுள்ளார். இவர் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக நிச்சயம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஏற்கனவே கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் நேற்று தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. அம்மணி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்னரே பழிதீர்த்துவிட்டு தான் உள்ளே சென்றுள்ளார்.