இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் சாதனை..!!

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார்.

கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும்.