காதல் தோல்வியால் மூன்றுமுறை தற்கொலை முயற்சி!

80களில் பெரும்பாலும் பேசப்பட்ட நடிகராக திகழ்ந்த பாக்யராஜ், இயக்கத்திலும் பெரும் வரவேற்பை பெற்று ஜாம்பவான் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.

தனக்கு பின் தன் பிள்ளைகளும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதற்காக மகன், மகளையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். சாந்தனு தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பாக்யராஜின் மகள் சரண்யா 2006ல் வெளியான பாரிஜாதம் என்ற படத்தில் நடிகர் பிரிதிவிராஜிற்கு ஜோடியாக நடித்தும் இருவரும் சில சர்ச்சையிலும் சிக்கினார்கள். இதை உதறி அமெரிக்கா படிப்பிற்காக சென்றார் சரண்யார்.

சரண்யாவும் ஆஸ்திரேலியாயாவை சேர்ந்த ஒரு இந்தியரும் காதலித்து வந்தனர். ஆனால் இறுதியில் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதற்காக பலமுறை ஆஸ்திரேலியா சென்றுவந்த சரண்யா காதல் தோல்விக்குபின் வீட்டிலேயே முடங்கினார்.

பட்டப்படிப்பினை முடித்து வீடு திரும்பிய சில காலங்களில் காதல் தோல்வியால் பல முறை தற்கொலை செய்து கொண்டு காப்பாற்றப்பட்டார்.

இதற்கு காரணம் அந்த காதலன் தான் என்று அவர் குடும்பத்திற்கு தெரியவருகையில் கல்யாணப்பேச்சு எடுத்தனர். ஆனால் நடிகை சரண்யா பாக்யராஜிடம் எனக்கு திருமணம் ஒன்றும் வேண்டாம் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

இந்நிலையில் 14 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நாயகியாக களமிறங்க உள்ளாராம் சரண்யா. காமெடி கலந்த அரசியல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

பாரிஜாதம் படத்தில் இவருடைய துறு துறு நடிப்பு பேசப்பட்டாலும் அதன் பிறகு தானாகவே சினிமாவை விட்டு ஒதுங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.