இந்த உணவுகளை கட்டாயம் அதிகமாக சாப்பிடவே கூடாது!

வீட்டில் சமைத்து உண்பதைக் காட்டிலும், நடந்து கொண்டே பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கி நடந்து கொண்டே உண்ணும் அளவிற்கு காலம் மாறி விட்டது. பேக் செய்யப்பட்ட உணவுகளை பார்க்கவும், விளம்பரத்தின் தந்திரங்களினாலும், அவை ஆரோக்கியமானதாக தெரிந்தாலும், அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிப்பதாகவே இருக்கிறது.

ஃபாஸ்ட் ஃபுட் மையமாய் மாறிவிட்ட, இந்நாட்களில் நாம் பதப்படுத்தப்பட்ட, பேக் செய்த உணவுகளையே பெரிதும் சார்ந்து இருக்கிறோம். அத்தகைய உணவுகளின் சுகாதார நலன்களினால் திருப்தி்ப்படும் நாம், அதன் போஷாக்கு மதிப்பை கணக்கிட தவறிவிடுகின்றோம்.

சிலர் நினைத்துக் கொள்வார்கள். ரெஸ்டாரெண்டுகளில் அசைவ உணவு சாப்பிட்டால் தானே ஆபத்து. நாம் சாலட்டுகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட்டுக் கொண்டு மற்றவற்றைக் குறைவாகச் சாப்பிட்டுக் கொண்டால் ஆயிற்று என்று.

உண்மையில் கொழுப்பு குறைந்த உணவுகளாகக் கருதப்படும் இவற்றில் தான் கிருமிகளின் பெருக்கம் அதிகம். அத்துடன் இவற்றில் சர்க்கரையின் அளவும் அதிகமென்பதால் இவற்றை மட்டுமே அதிகம் சாப்பிட்டு வைப்பதும் கூட பல நேரங்களில் ஆபத்தில் முடியலாம். நமக்கு எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் அதை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

அதிலும் சில குறிப்பிட்ட உணவுப் பொருள்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று பார்ப்போம்

இஞ்சி

இஞ்சி சளியை வெளியேற்றி கொழுப்பைக் குறைக்கும் தான். ஆனால் இஞ்சியை அதிகமாகச் சாப்பிட்டால் மென்மையான லேசான குரல் இருப்பவர்களுக்கு அது இறுகிவிடும் ஆபத்து உள்ளது.

எண்ணெய் பொருட்கள்

எண்ணெய் பலகாரங்கள் அதிகமாக சாப்பிடுகிறவராக இருந்தால் உங்களுடைய வயிற்றில் வலி அதிகமாகும். அத்துடன் உங்கள் எடை அதிகரித்து விடும்.

பூண்டு

வாயு தொல்லைக்கு பூண்டை அதிகமாக சாப்பிட்டால் அது ரத்தத்தை வேகமாக பரவச் செய்து கொதிக்க வைத்துவிடும். இதனால் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அதிகளவில் பூண்டு சாப்பிட்டால் குடல் எரிய ஆரம்பித்து விடும்.

உப்பு

உப்பு அதிகமாக சாப்பிட்டால் நம் உடல் யூரிக் அமிலம் அதிகரிக்கும். மூட்டு பிரச்சினை உண்டாகும். சிறு நீராகக் குழாய் பிரச்சினை ஏற்பட்டு விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை அதிகமாக சாப்பிட்டால் இதயம் பலவீனம் அடைந்து விடும்.

டீ, காபி குடித்தால்

டீயை அதிகமாகக் குடித்தால் உடல் நடுக்கம் ஏற்படும். காய்ச்சல், வீக்கம், பசியின்மை போன்ற உபாதைகள் ஏற்படும்.

காபி அதிகமாக குடித்தால் பித்தம் அதிகரிக்கும் அதன் மூலம் கை, கால் நடுங்கும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு விடும்.

மிளகாய்

மிளகாயை அதிகமாகச் சாப்பிட்டால் உடலின் வெப்பம் அதிகரித்து விடும். ஆண்களின் விந்து கெடும்.

முருங்கை இலை

முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதுவே முற்றிய முருங்கை கீரையை அதிகமாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரித்து விடும்.

மாங்காய்

மாங்காயை அதிகமாகச் சாப்பிட்டால் வயிறு கட்டும் பிரச்சினை உண்டாகும்