நமது இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் குறித்த கவனம் பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை.
மற்றொரு விஷயம், இன்றைய நாட்களில் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அது தீர்வதில்லை.
உடல் சீராவதற்கு பல நாட்கள் ஆகின்றன. இதற்கிடையில் உடல் பாதிப்பிற்கான அறிகுறிகள் குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதைவிட நாமே சில முன் முடிவுகளுக்கு வந்து, நம்முடைய உடல் காட்டும் சில அறிகுறிகளை ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
அது நாளடைவில் பெரிதாகி, உயிரையே குடிக்கும் அபாயத்துக்குக் கொண்டு வந்து விட்டுவிடுகிறது.
அப்படி உலக அளவில் அதிகமாக உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கிற கொடுமையான நோய்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
உலக அளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. குறிப்பாக இந்தியா நீரிழிவு பாதிப்பில் முன்னணியில் இருக்கிறது.
நேரடியாக நீரிழிவு நோய் உயிர்க் கொல்லும் நோயாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அது மற்ற கொடிய நோய்களை நம்முடைய உடலுக்கு அழைத்து வரும் வாசலாக அமைந்து விடுகிறது. அதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக அவசியம்.
மனச்சோர்வு
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அதிக மனச்சோர்வின் காரணமாக தனிமையில் தற்கொலை செய்து கொண்டார்.
இன்னும் நிறைய நிறைய மோசமான விளைவுகளை இந்த மனச்சோர்வு பிரச்சினை ஏற்படுத்துகிறது.
இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு மந்திர சக்தியாகவே இந்த ஸ்டிரஸ் (stress) என்னும் சொல் மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
யாரைக் கேட்டாலும் stress என்று தான் சொல்கிறார்கள். சமீபத்தில் மருத்துவமனைக்கு வரும் பல நோயாளிகளின் நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்த depression தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
புற்று நோய்
புற்றுநோயில் பல்வேறு வகைகள் உண்டு. அது நிறைய பேரின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதையடுத்து அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் புற்றுநோய். அதிகப்படியாக புகைப்பிடிப்பது, மாசுக்கள், மூச்சுக்குழல் அழற்சி போன்ற பல காரணங்களால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.
இன்று பெரும்பாலான பெண்கள் இந்த புற்று நோயினால் அவஸ்த்தை படுகின்றனர்.
மூளையில் ஏற்படும் அழற்சி
இது ஒரு தனிப்பட்ட நோய் இல்லையென்றாலும் கூட, பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறவர்கள் தீவிர சிகிச்சை பெறும்போது, குறிப்பாக விபத்து போன்ற 100க்கும் மேலானவர்கள் மூளையழற்சியால் உயிரிழந்தனர். மூளையில் உண்டாகும் அழற்சி அல்லது வீக்கம் காரணமாக இந்த நோய் உண்டாகிறது. உணவு மற்றும் உணவினால் உண்டாகும் நச்சுத் தன்மையாலும் கூட இந்த மூளையழற்சி பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. இந்த மூளையழற்சியால் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் இறப்பையே சந்திக்கிறார்கள்.