காலையில எழுந்ததும் இந்த 5 விதைகளை சாப்பிட்டாலே நோயெதிர்ப்பு சக்தி பல மடங்கு கூடும்!

பழங்கள், காய்கறிகள் மட்டுமல்ல விதைகளும் கூட நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவது தொற்று நோய்களில் இருந்து காக்க உதவும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இந்த தாவர விதைகள் உங்க உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

​சூரிய காந்தி விதைகள்

உங்க உணவில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இல்லாவிட்டால் உங்க நோயெதிரிப்பு சக்தி குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சூரிய காந்தி விதைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

சூரிய காந்தி விதைகளில் தான் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அதில் நல்ல கொழுப்பும் காணப்படுகிறது. இவற்றில் மக்னீசியம், விட்டமின் ஈ போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க 1 டீ ஸ்பூன் சூரிய காந்தி விதைகளை சேர்த்து வாருங்கள்.

எள் விதைகள்

குளிர் காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்க எள் விதைகள் உதவுகின்றன. எள் விதைகளில் துத்தநாகம் அதிகம் நிறைந்துள்ளன. இது தான் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் எள்ளை தங்கள் உணவில் சேர்த்து வருவது அவசியம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

எனவே தினமும் 1 டீ ஸ்பூன் எள் விதைகளை சாப்பிட வேண்டும். நம் நோயெதிரிப்பு மண்டலமும் வலுப் பெறும்.

​சணல் விதைகள்

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் உங்க புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்ய சணல் விதைகள் உதவுகின்றன.

இது புரதச்சத்து அதிகமாக இருப்பதால் புதிதாக தசைகளை உருவாக்க உதவுகிறது.

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க, எடையை இழக்க உதவுகின்றன. பசியை கட்டுப்படுத்துகிறது.

​பூசணி விதைகள்

புரதம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களையும் தவிர பூசணி விதைகளில் விட்டமின் கே உள்ளன. இந்த சத்து பெரும்பாலான உணவுகளில் காணப்படுவதில்லை.

இது அரிதாக கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து ஆகும். இந்த விட்டமின் குறைபாடு ஏற்பட்டால் எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் விட்டமின் கே தான் கால்சியம் சத்தை எலும்புகளில் பிணைக் உதவுகிறது. எனவே பலவீனம் ஆன எலும்புகள், கீல் வாதம் போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் பூசணி விதைகளை தவறாமல் உணவில் சேர்த்து வரலாம்.

மேலும் இது நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. புரோகிரெஸ்ட்டிரோன் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் வாய்ந்தது.

​சப்ஜா விதைகள்

இந்த விதைகளை ஃபலூடா போன்ற பானங்களில் பார்த்து இருப்பீர்கள். தண்ணீரில் ஊறியதும் பார்ப்பதற்கு ஜவ்வரிசி போன்று கண்ணாடி மாதிரி இருக்கும்.

சப்ஜா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ஏ.எல்.ஏ) நிறைந்துள்ளது.இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

வைசெனின், ஓரியண்டின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஃபிளாவனாய்டுகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எனவே மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் சலதோஷம் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுக்க உங்க உணவில் சப்ஜா விதைகளை சேர்த்து வரலாம்.

சப்ஜா விதைகளை இரவிலேயே ஒரு டீ ஸ்பூன் அளவு ஊற வைத்து காலையில் எழுந்ததும் அந்த விதைகளை எடுத்து வாருங்கள்.

பல ஆரோக்கியங்களை அள்ளி கொடுக்கும் இது போன்ற விதைகளை இனி தினம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.