சுவையான பப்பாளி பழத்தில் சில பக்கவிளைவுகளும் உள்ளன.
கருச்சிதைவை உண்டாக்குவது முதல் உணவுக் குழாயில் பிரச்சனை உண்டாக்குவது வரை, பப்பாளியை சாப்பிடுவதால் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
இப்போது பப்பாளி சாப்பிடும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைக் காண்போம்.
பிறப்பு குறைபாடுகள்
பப்பாளி இலைகளில் பாப்பைன் என்னும் சேர்மம் உள்ளது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், இது குழந்தைகளுக்கு நச்சுத்தன்மை அளிக்கும். சில சமயங்களில் இது பிறப்பு குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது பப்பாளியின் பக்க விளைவுகள் பற்றி அதிகம் தெரியவில்லை. ஆகவே கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் சிறிது காலம் பப்பாளி சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அழற்சி
பழுக்காத பப்பாளி/பப்பாளி காய் சிலருக்கு அழற்சியை உண்டாக்கும். ஆகவே பப்பாளி காயை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள் அல்லது சென்சிட்டிவிட்டி/உணர்திறனை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அதனால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
கருக்கலைப்பு
பப்பாளியின் விதைகளும், வேரும் கருக்கலைப்பை ஏற்படுத்தும். பழுக்காத பப்பாளி கருப்பையின் சுருக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் மறந்தும் பப்பாளி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
இரத்த சர்க்கரை குறையும்
நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்து வருபவராயின், அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று குறைத்துவிடும். இது மிகவும் ஆபத்தானது. ஆகவே அளவாக சாப்பிட்டு, பப்பாளியின் பலனைப் பெற முயற்சி செய்யுங்கள்.
நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்
பப்பாளியை அதிகம் உட்கொள்வது நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும். ஏனெனில் பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்னும் பொருள் உள்ளது. இது தான் இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாகும்.