ராஜமௌலி தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குனர். அதுவும் பாகுபலிக்கு பிறகு ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார்.
இவருடைய இயக்கத்தில் நடிக்க ரஜினிகாந்த் முதல் சல்மான் கான் வரை காத்திருக்கின்றனர்.
அந்த அளவிற்கு ஒரே படத்தில் ராஜமௌலி புகழ் இந்தியா முழுவதும் பரவி விட்டது.
இவர் இயக்கத்தில் தற்போது ஆர் ஆர் ஆர் படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜமௌலி அவர்களுக்கு கொரொனா என்று அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும், தன் குடும்பத்தினரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் மிகவும் வருத்தப்பட்டு வருகின்றனர்.
My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today. We have home quarantined as prescribed by the doctors.
— rajamouli ss (@ssrajamouli) July 29, 2020