நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி!

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும் அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளானது. பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி என்ற பெண், வனிதா விஜயகுமார் குறித்து கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சூர்யா தேவி மீது நடிகை வனிதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வனிதா மற்றும் சூர்யா தேவியை அழைத்து விசாரணை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து சூர்யா தேவி, வனிதா குறித்து வீடியோ வெளியிட்டதால் அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக கடந்த 23ம் தேதி காவல் ஆய்வாளரும் சூர்யா தேவியும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாதேவிக்கும், சூர்யா தேவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யா தேவிவீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக தெரிகிறது மாநகராட்சி அதிகாரிகள் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்துள்ளது.