தற்போது உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதோடு, அதிகமான மக்களின் உயிரைப் பறித்தும் வருகின்றது.
கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு மக்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளை தேடித் தேடி சாப்பிட ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வகையில் இருமல், சளி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் கற்பூரவள்ளி டீ தயாரிக்கும் முறை குறித்து கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கற்பூரவள்ளி இலைகள் – 5
- இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
- டீத்தூள் – ஒரு டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – தேவையான அளவு
- தேன் – தேவைக்கு
- தண்ணீர் – 2 கப்
செய்முறை
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- பின்பு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், டீ தூள் மற்றும் இஞ்சித் துருவல் சேர்க்கவும், பின்பு கற்பூரவள்ளி இலையினையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
- பின்பு வடிகட்டு தேவையான அளவு தேன், எலுமிச்சை கலந்து பருகவும்.