மற்றுமொரு பாரிய தடையை எதிர்நோக்கும் TikTok

அண்மையில் இந்தியாவில் சுமார் 60 வரையான இணையத்தளங்கள் மற்றும் அப்பிளிக்கேஷன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இவற்றில் TikTok செயலியும் உள்ளடங்குகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவிலும் குறித்த செயலிக்கு தடை விதிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 3 மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா நிலைமை காரணமாக ஏராளனமானவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்படடிருந்தது.

இதனால் ஏராளமானவர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர்.

எனினும் இதன் ஊடாக பல அநாகரிக செயல்கள் மற்றும் தகவல் கசிவுகள் இடம்பெற்று வந்தன.

இதனை அடுத்தே இவ்வாறு தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.