எல்லாருக்கும் தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காக சிலர் கண்ட கண்ட எண்ணெய்களை தேய்ப்பது, கூந்தல் பராமரிப்பு க்ரீம்களை வாங்கி தேய்ப்பது, அடிக்கடி ஷாம்பு மாற்றுவது, வீட்டு வைத்தியங்கள் என்று நாமும் எதை எதையோ ட்ரை பண்ணி பார்ப்போம்.
இதுல கொஞ்சம் பேர் ரொம்ப யோசித்து அடிக்கடி மொட்டை அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
குழந்தையாக இருக்கும் போது கூட அடிக்கடி மொட்டை போட்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற போக்கு இன்றளவும் நம் மக்களிடையே காணப்படுகிறது.