வேலையில்லாததால் மீன் இறைச்சி விற்கும் டிவி..!!

கொரோனாவால் பொது ஊரடங்கு இன்னும் இம்மாதம் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் முழு ஊரடங்கு கடந்த வாரம் முதலே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாத காலமாக இல்லை. இதனால் இதனை நம்பி பிழைப்பு நடத்தும் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

சிலர் தற்போது வாழ்வாதாரத்திற்காக வேறு வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இதில் தற்போது மலையாள சினிமாவில் மிமிக்ரி செய்தும் மற்றும் பாடல்கள் பாடியும் வந்த சுதீஷ் அங்கேரி தற்போது மீன் விற்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த இவர் தற்போது கொரோனா ஊரங்கால் பள்ளிக்கூடமும் இல்லாததால், சினிமாவும் இல்லாததால் மீன் விற்கும் வேலையை தொடர்ந்து செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்.