30 நாட்களுக்கு தடை விதித்த கோலா நிறுவனம்.!

சமூக ஊடங்களில் விளம்பரம் செய்வதை 30 தினங்களுக்கு நிறுத்திக் கொள்வதாக சர்வேதேச குளிர்பான நிறுவனம் கோகோ கோலா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் வெறுப்பு கருத்துக்கள் பகிரப்படுவதற்கு எதிராக பிரசாரம் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொறுப்புள்ளது. இது போன்ற கருத்துக்கள் இணையத்தில் பகிரப்படுவதால் இதற்கு எதிரான நடவடிக்கையை அவர்கள் எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் குறிப்பிட்ட பிரிவினரை சிறுமைப்படுத்தும் விளம்பரங்களை தடை செய்ய அதீத கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோலா நிறுவனம் இதுகுறித்து, “இனவாதத்திற்கு சமூக வலைதளத்திலும் இடமில்லை. சமூக ஊடகங்களிலும் இடமில்லை.” என தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பொறுப்புணர்வை உறுதிபடுத்தும் நோக்கில் 30 நாட்களுக்கு விளம்பரம் செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.