தென்மராட்சியில் ரௌடிக்குழுக்கள் மோதல்: 3 பேர் காயம்; மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு!

தென்மராட்சி அல்லாரை பகுதியில் ரௌடிக்குழு ஒன்றின் உறுப்பினர்களை வழிமறித்து, பிறிதொரு ரௌடிக்குழு தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் எரிக்கப்பட்டுள்ளன.

கொடிகாமத்தில் இயங்கும் ரௌடிக்குழுவொன்றின் உறுப்பினர்களை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு அல்லாரைப்பகுதியில் வைத்து, சாவா குழு ரௌடிகள் அவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் எரிக்கப்பட்டன.

கொடிகாமம், கச்சாய் வீதிப் பகுதியை சேர்ந்த 53 வயதான வேலுப்பிள்ளை சுரேந்திரன் மற்றும் அவரது மகனான 19வயதான சுரேந்திரன் றெஜிஸ்ரன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

23வயதான நபர் ஒருவரும் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்