8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 காமுக முதியவர்கள்..

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே தெருவில் வேலையில்லாமல் வயது முதிர்ந்த 4 காமுக நபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

சிறுமியை அழைத்த அதே பகுதியை சார்ந்த 4 முதியவர்கள் மற்றும் 2 இளைஞர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். காமுக நபர்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, தனது தந்தையிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

விபரீதத்தை புரிந்து கொண்ட சிறுமியின் தந்தை இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது உறுதியான நிலையில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அப்பகுதியை சார்ந்த 4 முதியவர்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.