10 வயது சிறுவன் ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தல்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஓரினசேர்கைக்கு மறுப்பு தெரிவித்த 10 வயது சிறுவனை 22 வயது இளைஞர் கொடூரமாக கொலை முயற்சி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜானுதினபூர் பகுதியை சார்ந்த இளைஞன் சல்மான். இவர் இப்பகுதியை சார்ந்த 10 வயது சிறுவனை ஓரினசேர்கைக்கு அழைக்கவே, சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளான்.

இதனால் சிறுவனை கொலை முயற்சி செய்து, உடலை எரித்தது தெரியவந்துள்ளது மேலும், சிறுவன் விளையாண்டுகொண்டு இருந்த நிலையில், சிறுவனை சல்மான் ஓரினசேர்கைக்கு அழைத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுவன் மறுப்பு தெரிவிக்கவே, சிறுவனை இளைஞன் தாக்கியுள்ளான். மேலும், சிறுவன் தன்னை காப்பாற்றக்கூறி கத்தவே, அக்கம் பக்கத்தினர் சுதாரித்துக்கொள்வார்கள் என்று கூறி கழுத்தை நெரித்துள்ளான்.

பின்னர் சிறுவனின் உடலை புதரில் போட்டு எரிக்கவே, சிறுவன் உடலின் சூடு தாங்க இயலாமல் அலறியுள்ளான். பின்னர் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சிறுவனிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சல்மானை கைது செய்துள்ளனர்.