1,683 பேருக்கு கரோனா உறுதி… 20 பேர் பலி.. 752 பேர் பூரண நலன்.. தமிழக சுகாதாரத்துறை..!!

தினமும் கரோனா வைரஸின் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களை காப்பாற்றும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் கரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறாமல் இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்தது. இன்று கரோனாவால் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கரோனாவால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். இன்று இரண்டு பேர் பலியாகி, மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 662 ஆக இருந்தது. இன்று பூரண நலன் பெற்று 752 பேர் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியாகி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு.. திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு, திருவாரூர், தென்காசி, தஞ்சாவூர், இராமநாதபுரம், விழுப்புரம், திருநெல்வேலியில் தலா ஒருவருக்கும், நாமக்கல்லில் 4 பேருக்கும், மதுரையில் இரண்டு பேருக்கும், விருதுநகர் மற்றும்திண்டுக்கல்லில் 3 பேருக்கும், சேலத்தில் 5 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.