கொரானா வைரஸ் பாதிப்பால் உலகமே என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறது. இதற்காக அனைத்து நாடுகளும் தடுக்கும் முயற்சிகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவில் ஊரடங்கை அமல்படுத்தி உத்திரவிட்டு அனைத்து மக்களையும் தனிமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இந்நிலையில் கொரானா ஊரடங்கை எதிர்த்து முன்னறிவிப்பு இல்லாமல் இதை அமல்படுத்தியதால் மக்கள் நீதிமன்ற தலைவர் கமல்ஹாசன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு சமுகவலைத்தளத்திலும் தொலைக்காட்சியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
பிக்பாஸ் மூலம் பல சர்ச்சையான கருத்துக்களையும் பலரின் நடவடிக்கைகளை கேலி செய்யும் விதமாக பேசி வருபவர் என்ற பெயர் பெற்றவர் நடிகை காயத்ரி ரகுராம். நடன இயக்குநராக இருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து வெறுப்புகளை பெற்றவர்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது நடிகர் கமல்ஹாசன் காயத்ரியை விமர்சித்திருந்தார். இதனால் கமஹாசன் சமுகவலைத்தளத்தில் கூறும் சில கருத்துக்களை எதிர்த்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் பிரதமருக்கு கடிதம் எழுதியதை எதிர்த்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
சீன அதிபருக்கும், தப்லீக் ஜமாத்துக்கும் கடிதம் எழுதுவதைவிட்டு ஏன் பிரதமருக்கு எழுதியுள்ளீர்கள் என்று கிண்டலாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் அமைச்சரை குறைகூறும் நீங்கள், மாநில அரசுக்கு தகவலை தெரியபடுத்தி மற்றவரிடம் கூறுங்கள் என்று கூறி பதிவிட்டுள்ளார்.
Why don’t you write a letter to #Xijinping and #TabhleegiJamaat how they failed? And write a letter to irresponsible citizens who don’t obey. Are you saying @CMOTamilNadu @Vijayabaskarofl is failing? Write letter TN MLAs & MPs. if u have problem address it to the state gov first https://t.co/qlbuLk5Zll
— Gayathri Raguramm (@gayathriraguram) April 6, 2020