ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

தற்போது உலகில் பரவலாக பல நாடுகளிலும் மக்கள் வீட்டினுள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொழுதுபோக்கிற்கு அதிகமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்திவருகின்றனர்.

தற்போது சராசரியாக நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட் கைப்பேசி பயன்படுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் Smartphone Pinky எனும் குறைபாடு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது நீண்ட நேரம் கைப்பேசிகளை கையில் பிடித்துவைத்திருக்கும்போது சிறிய விரலில் வளைவு ஏற்படும் எனவும் இதுவே Smartphone Pinky என அழைக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மும்பை முலண்ட்டிலுள்ள Fortis வைத்தியசாலையில் பணிபுரியும் எலும்பியில் சத்திரசிகிச்சை நிபுணரான Sachin Bhonesle தெரிவித்துள்ளார்.