கல்லீரல் பிரச்சினையை விரட்டியடிக்கும் கொய்யா.!!

பழங்களிலேயே கொய்யா மிகவும் விலை குறைந்தது. அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய பழம் கொய்யா பழம்.

கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவி பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி கொய்யாப்பழத்தில் உள்ளது. கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் நிறைய உள்ளது. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை எல்லாம் மருத்துவகுணம் வாய்ந்தது.

கொய்யாபழத்தின் பயன்கள்

  • கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கக்கூடியது. இலை ரத்தப்போக்கை தடுக்கும் திறன் கொண்டது. மலச்சிக்கல்லையும் போக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி வாய் கொப்பளித்தால் குணமாகும்.
    • கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.
    • கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால் விரைவில் ஆறிவிடும். வயிற்றில் ஏற்படும் அல்சர் கொய்யா இலை குணப்படுத்தும்.
    • கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழிக்கும். கொய்யா வேர்பட்டை குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை சரி செய்யும்.
    • வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதம். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவி செய்கிறது. கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது.
    • முகத்திற்கு அழகையும், பொலிவையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
    • இப்பழம் சீரண மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை உண்பதால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். மலச்சிக்கலை போக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. மலக்கிருமிகளை கொல்லும் சக்தி இப்பழத்திற்கு உள்ளன. வயிற்றில் புண் இருந்தால் அதை ஆற்றும் தன்மை கொய்யாப்பழத்திற்கு இருக்கிறது.
    • இரத்த சோகை உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் குணம்பெறலாம். பசியை கொய்யாப்பழம் தூண்டவல்லது.
      • இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய்விடும்.
      • கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவும்.
      • சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிட கூடாது. சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பு சாப்பிடுவது நல்லது.
      • இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் இருமல் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.
      • கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு சிலருக்கு கொய்யாபழம் மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
      • கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும். வாந்தி மயக்கம் ஏற்படும்.