இந்த பிரச்சினை கூட கொரோனா அறிகுறியாக இருக்கலாம்?.. உஷார் மக்களே!

கொரோனா வைரஸ் அறிகுறியாக இதுவரை சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் உடல் வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவற்றையே இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியாக இருந்தன.

இப்போது செரிமானப் பிரச்சனையும் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில் அதில் 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன. பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெறுமனே செரிமானப் பிரச்சனைகள் மட்டுமே காணப்பட்டுள்ளன. இதனால், இந்த பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.