இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் இருக்கும் அது எந்த ராசி தெரியுமா ? ? இதோ இன்றைய ராசிபலன் (31.03.2020)

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் 31 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்பு………

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்
மேஷராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு. பிற்பகலுக்கு மேல் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களிடம் கேட்டிருந்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். விநாயகரை வழிபட தடைகள் விலகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் வீண்செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷபராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
மிதுனராசி அன்பர்களே!

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும், பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று துர்கையை வழிபடின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

கடகம்
கடகராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு கையிருப்பைக் குறைக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. மகாவிஷ்ணு வழிபாடு மன அமைதி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

சிம்மம்
சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்பத்தில் அந்நியர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று அம்பிகையை வழிபடுவதன் மூலம் அதிக நற்பலன்களைப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி
கன்னிராசி அன்பர்களே!

குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.

துலாம்
துலாராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாகும். தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள். ஆஞ்சநேயரை வழிபட உற்சாகம் பெருக்கெடுக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிகராசி அன்பர்களே!

இன்றைக்கு எதிலும் நிதானமாகச் செயல்படவும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு
தனுசுராசி அன்பர்களே!

தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பணிகளில் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். நீண்டநாள்களாகத் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை வீட்டிலேயெ நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகரம்
மகரராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் மனதுக்கு உற்சாகம் தரும். ஆறுமுகப் பெருமானை வழிபட அனுகூலப் பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

கும்பம்
கும்பராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயிடம் கேட்ட உதவி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு செரிமானப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

மீனம்
மீனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். விநாயகரை வழிபட மனக் குழப்பங்கள் நீங்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.