கண்டி-மாத்தளை ஏ9 வீதியின் ஒரு பகுதி பூட்டு!

மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதையடுத்து, கண்டி-மாத்தளை ஏ9 வீதி, அம்பத்தென்னை குடுகல தொடக்கம் பலகடுவ வரையான ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மாத்தளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கட்டுகஸ்தோட்டை-வத்தேகம வீதியை அல்லது மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகின்ற போதிலும், எவ்விடத்திலும் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.