நாட்டின் 19 மாவட்டங்களில் ஊரடங்குத் தளர்வு!

நாட்டின் 19 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (30) காலை 6 மணி முதல் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த 19 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.