19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நாடெங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 6.00 மணிக்கு 19 மாவட்டங்களில் தளர்த்தப்படவுள்ளன.

இவ்வாறு இன்று காலை தளர்த்தப்படும் ஊரடங்கு (30.03.2020) பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதேவேளை கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.