கடந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்வில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி முதலில் கவினை காதலித்தார். அதன்பின் முகேனை காதலித்த இவர் செய்த காரியத்தால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
எப்போதும் பிக்பாஸ் வீட்டில் அழுமூஞ்சியாக காட்சி தரும் அபிராமி வெளியில் வந்தபிறகு மிகவும் சந்தோசமாக இருந்தார். அதன் பின்னர் அபிராமி, சிறிய விளம்பரங்கள், விருதுகள் என்று மிகவும் பிஸியாகிவிட்டார். தற்போதைய பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற ஆரி மற்றும் லாசலியாவுடன் இணைந்து இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை அபிராமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “துரோகிகள் சில நேரங்களில் நண்பர்களைப் போல நடிப்பார்கள். எச்சரிக்கையாக இருங்கள். பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் நான் தெரிவிக்கிறேன். நம்புங்கள்.” என்று தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். யாரை இப்படி மறைமுகமாக வசை பாடுகிறார் என்று பலரும் குழம்பி போய் இருக்கின்றனர்.