4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்…..

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தச்சம்பட்டு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிராமத்தை சார்ந்த நான்கு வயதுடைய குழந்தை பெற்றோருடன் வசித்து வந்துள்ளது. இக்குழந்தையை இதே பகுதியை சார்ந்த 16 வயது சிறுவன் ஏமாற்றி ஏரிக்கரைக்கு அழைத்து சென்றுள்ளான். பின்னர் அங்கு வைத்து பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

குழந்தை அழுந்துகொண்டே வீட்டிற்கு வந்த நிலையில், குழந்தை அழுவதை கண்டு பெற்றோர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதனையடுத்து குழந்தை கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், சிறுவனையும் அழைத்து கொண்டு அங்குள்ள தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மணிமாறன், கொடூரனை சிறுவன்.. தெரியாமல் செய்திருப்பான்.. சமாதானமாக செல்லுங்கள் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது.

காவல் ஆய்வாளரின் பதிலால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மீண்டும் மதிய நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில், மாலை சுமார் 5 மணிவரையில் காத்திருக்க வைத்து, இது மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விஷயம் என்று கூறி திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற நபர்களை காவல் ஆய்வாளர் இல்லை என்று கூறி அமரவைத்த நிலையில், இரவு 8 மணியான பின்னர் என்ன விஷயம் என்று கேட்க கூட ஆட்கள் இல்லாதவாறு நடந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு முன்புறம் நின்று கோஷம் எழுப்பவே, இதன்பின்னர் வந்த அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.