பூ விற்கும் இன்ஜினியர்!…. சொந்த தொழிலில் சாதித்த தமிழன்

இன்ஜினியரிங் படித்திருந்தாலும் தற்போது பூக்கடை நடத்தி ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் கரூரை சேர்ந்த பட்டதாரி.

தங்களுடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் பட்டதாரிகள் ஏராளம்.

இதனால் பலரும் தங்களுக்கு தெரிந்த சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

அப்படி பூ கட்டத் தெரிந்த கரூரை சேர்ந்த வாலிபரான கார்த்திக் என்பவர் சொந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

இவர் வாங்கிய சம்பளம் பற்றாக்குறையாக இருந்ததால் இந்த யோசனை உதித்ததாக தெரிவிக்கிறார்.

நண்பர்களின் உதவியுடன் கடையை நடத்தி வரும் கார்த்திக்குக்கு தொடக்கத்தில் மிக குறைவான அளவே வருமானம் வந்ததாக தெரிவிக்கிறார்.

பூ கட்டி விற்பது குடும்ப தொழிலாக இருந்தாலும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி இன்ஜினியரிங் படிக்க வைத்த மகன் இத்தொழில் செய்வதற்கு எதிர்ப்பு எழுந்ததாம்.

இருப்பினும் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் ரூ.1 லட்சம் முதலீட்டில் நண்பர்கள் கைகோரக்க தொழிலை தொடங்கியுள்ளார்.

முதலில் திருமண மாலை, சடை அலங்காரம் என தொடங்கிய தொழிலில் தற்போது மேடை அலங்காரம், கோவில் பூஜைகளுக்கு பூ வரை செய்து வருகிறாராம்.

மேலும் ஓன்லைனில் தன்னுடைய தொழிலை அறிமுகப்படுத்தியவர், மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

இதோடு இல்லாமல் அடுத்ததாக ஹொட்டல், டிராவல்ஸ் என தொழிலை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக்.