நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படம் அடுத்து வாரம் பிப்ரவரி 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை விளம்பரப்படுத்தும் விதமாக பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகை த்ரிஷா வரவில்லை. இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் டி.சிவா மேடையிலேயே த்ரிஷாவை எச்சரித்துள்ளார்.
‘இன்று சூழ்நிலை காரணமாக வரமால் போயிருக்கலாம். ஆனால் அடுத்த வாரம் படம் ரிலீஸ், இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றால் த்ரிஷா வாங்கிய சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி தரவேண்டிவரும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எச்சரிக்கிறேன்’ என கூறியுள்ளார் டி.சிவா.