கொரோனா பீதி..! கிருமிநாசினி வாங்க தகராறு.. 2 பேரை கத்தியால் குத்திய இளம்பெண்!

சீனாவில் கிருமிநாசினி வாங்க ஏற்பட்ட தகராறின் போது இளம்பெண் ஒருவர் இரண்டு பெண்களை கத்தியால் குத்திய சமப்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. நோய்தொற்று ஏற்படாமல் தவிர்க்க அரசு தீவிரமாக போராடி வருகிறது.

எனினும், நாட்டில் மாஸ்க் மற்றும் கிருமிநாசினி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாணமான ஜியாங்சு, பாயிங் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ஒரே ஒரு கிருமிநாசினியை வாங்க போட்டியிட்ட போது பெண்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின் போது 17 வயதுடைய இளம்பெண் கத்தியால் 71 வயது மூதாட்டி மற்றும் 9ம் வயது சிறுமியை கத்தியால் குத்தியுள்ளார். இதில், மூதாட்டி சம்பவயித்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார்.

காயமடைந்த 9ம் வயது சிறுமி மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.