யாழ்.இளவாலை – சாந்தை பகுதியில் வளர்ப்பு நாயினால் உருவான வாள்வெட்டு : மேலதிக தகவல்கள்!

யாழ்.இளவாலை – சாந்தை பகுதியில் வளர்ப்பு நாயினால் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளது. இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கான 3 பேர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவா் நாய் ஒன்றை வளா்த்து வந்துள்ளார்.

குறித்த நாய் வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில் நாயை அடித்து துன்புறுத்திய நிலையில் நாய் குற்றுயிராக கிடந்துள்ளது.

இதனையடுத்து நாயின் உாிமையாளர் கோபமடைந்து வாயில்லாத ஜீவனை அடித்து துன்புறுத்துவதா? என பேசியிருக்கின்றார்.

இதனையடுத்து அயல் வீட்டார் குறித் நாயின் உாிமையாளருடன் தர்க்கப்பட்டுள்ளார். அந்த தர்க்கம் மேலும் முற்றிய நிலையில் அயல் வீட்டிலிருந்தவர்கள் நாயின் உாிமையாளார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியிருப்பதுடன், அவருடைய வீட்டுக்குள் புகுந்தும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

வாள்வெட்டில் ஈடுபட்டவர்களில் இன்னும் நீதி மன்றத்தில் ஒப்படைக்கவில்லையெனவும் மேலும் தாக்குதலுக்கு உள்ளான நபர் வாக்கு மூலம் அளித்தும் தாக்கியவர்கள் கைது செய்யவில்லை.